Tuesday, January 13, 2009

pongal kavithai

அழுகின்ற பிள்ளைக்குகொடுக்க உணவில்லை..குளிரைத் தாங்கிடபோதிய உடுப்பில்லை..விழுகின்ற குண்டுகளின்வேகத்தை பொறுத்தே,அடுத்த நிமிடங்கள்உயிர்வாழ்கிற நிலை..

எங்கெல்லாம் குண்டுகள்விழுகின்றனவோஅங்கெல்லாம் அழுதபடிதமிழ்த் தாய்மார்கள்...இங்கெல்லாம் நடக்கிறஇன்னல்கள் கண்டும்இனிக்குமா நமக்கு புத்தாண்டும் பொங்கலும்?காந்தியம் பேசிவிட்டுகளவாணித் தனமாக"இந்தி"யன் அளித்தஆயுதங்கள் கொண்டு,சிங்கள வெறியன்தொடுக்கிறப் போரில்"இந்தி"யர் என்பதால்நமக்கும் பங்குண்டு..!கொல்லாதே என்றுகூக்குரல் எழுப்பினால்தேசத் துரோகமாம்இந்தியம் சொல்கிறது...கொலைகார "இந்தி"யனாய்வாழ்ந்து தொலைப்பதைவிடதமிழனாய் தேசத் துரோகியாய்போராடி மடிவோம்...!உணவைப் பொங்கியேஓடிய நாட்கள் போதும் !தமிழினத்தின் விடியலுக்காகஉணர்ச்சியால் பொங்குவோம்!உணர்வை மேம்படுத்திஉயிரையும் உரிமையும் காக்கஉறுமுகின்ற புலியாகஉலகறியப் பொங்குவோம்!தோழமையுடன்,க.அருணபாரதி